
Others Poetries
ஜன்னல் கன்னி!
அவள்
மழை நீரில்
காகிதக் கப்பல் விடும்
வயதில் அந்நதச் செடியை
பார்த்தாள்
ஜன்னல் வழியாக
அது வளர்ந்து மரமாகி
பூ பூத்த பிஞ்சாகி
காய்ந்து கனிந்து
இலை உதிர்ந்தது
மறுபடி துளிர்விட்டது
பருவக்காலம் மாறியதால்
ஆனால்
அவள் மட்டும் இன்னமும்
அந்தச் செடியைப்
பார்த்துக் கொண்டிருக்கிறாள்
ஜன்னலின் கன்னியாகவே!
அஸ்மா பாரிஸ்,
மல்வானை
You must be logged in to post a comment Login